Site icon Tamil News

பிரான்ஸில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் – அதிர்ச்சி கொடுத்த கைதிகள்

பிரான்ஸில் தீர்ப்பிற்காகத் தடுத்து வைக்கப்படும் சிறையான நிர்வாகத் தடுப்பு மையத்திலிருந்து 10 கைதிகள் தப்பியோடி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

Sète நகரிலுள்ள சிறையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறைத்துறையின் காவலர்கள் பற்றாக்குறையும், அங்கிருந்த கண்காணிப்பு கமராக்கள் இயங்காமையுமே, இந்தக் கைதிகள் தப்புவதற்குக் காரணமாகும்.

சிறையதிகாரிகளின் தொழிற்சங்கம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

கைதிகள் 10 பேரும் ஒரு அறைக்குள் கூடி, கதவின் பிணைச்சலைக் கழற்றி, அதன் மூலம் மேற்கூறையை வெட்டி, கூரையில் ஏறித் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. உள்துறை அமைச்சரின் அக்கறையின்மையே இதற்குக் காரணம் எனவும், தொழிற்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

Exit mobile version