Site icon Tamil News

இராணுவ பயிற்சியாளர் போல் வேடமிட்டு உக்ரைனில் நுழைந்த ரஷ்ய உளவாளி கைது!

உக்ரைனின் இராணுவ பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைனின் இராணுவ பயிற்சியாளராக வேடமிட்டு வந்த ரஷ்யாவை சேர்ந்த  உளவாளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தெற்கு உக்ரைனில் உள்ள மைக்கோலாய்வில், உளவு தகவல்களை சேகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவது, ஏவுகணை தாக்குதல்களை குறிவைக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொண்ட தளங்களின் இருப்பிடங்கள் பற்றிய உளவு தகவல்களை அவர் ரஷ்யாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

உளவாளியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரஷ்யாவுடனான கடிதப் பரிமாற்றங்கள் அடங்கிய கைத்தொலைபேசியும், சோதனைக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர் இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version