Site icon Tamil News

கலைப்பீட மாணவர்களை தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளக் கூடாது!

கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க முன்வைக்கப்பட்ட யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அபாயம் காணப்படுவதாக அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்இ ‘ஒரு செவிலியர் உயர் கல்வியைப் பெற்றால் அது நோயாளிக்கு நன்மை பயக்கும். விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

ஜனாதிபதிக்கு யாரோ ஒரு குறுகிய நோக்கு அறிவுரை வழங்கியதாக நினைக்கிறோம்.அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிவப்பு அறிவிப்பு விடுகிறோம். மருத்துவமனைகளின் தாதியர்கள்அமைதியற்றவர்களாக உள்ளனர்இ இது நல்ல விஷயம் அல்லஇ தீவு முழுவதும் ஏராளமான எதிர்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version