Site icon Tamil News

டெல்லி அணிக்கு எதிராக 168 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த சென்னை

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்குவாட், டெவன் கான்வே களமிறக்கினர். ஆனால், தொடக்க வீரர்கள் இருவரும் சீரான இடைவெளியில் அவுட் ஆகினர்.

கான்வே 10 ரன்னிலும், கெய்குவாட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மொயின் அலி 7 ரன்னிலும், ரஹானே 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே, அம்பதி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிவம் துபே 12 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 25 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

ராயுடு 17 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை 16.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பின்னர் களமிறங்கிய ஜடேஜா, கேப்டன் டோனி கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

9 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்த டோனி கடைசி ஓவரில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.

டெல்லி தரப்பில் அந்த அணியின் மிச்சேல் மார்ஷ் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்க உள்ளது.

Exit mobile version