Site icon Tamil News

மைத்திரியிடம் இருந்து பறிபோகும் முக்கிய பொறுப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கத் தயாராகும் புதிய கூட்டணியின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணிகள் மீது எந்த அரசியல் கட்சிக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இன்று மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை. தலைமைச் சபைகள் அதைத்தான் கேட்கின்றன.

கடந்த வாரம் திரு.லான்சாவின் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முயல்வதைக் கண்டேன்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version