Tamil News

விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி – அதிபர் புதின் அறிவிப்பு!

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்குவதில் மிக நெருக்கமாக இருப்பதாகவும், விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தெரிவித்தார்.

இது குறித்து நேற்றிரவு ரஷ்யாவின் மாஸ்கோ மன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் மிக அருகில் நெருங்கி விட்டோம். விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

அதே சமயம், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த மாஸ்கோ மன்றத்தில் நேற்றிரவு பேசிய ரஷ்ய அதிபர் புதின், விரைவில் பயன்படுத்தப்பட உள்ள தடுப்பூசிகள் எந்த வகையான புற்றுநோயைத் தடுக்கும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

Russian President Putin Says Russian Scientists Close to Creating Cancer  Vaccines | - Times of India

புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் பல நாடுகளும், நிறுவனங்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. கடந்த ஆண்டு, பிரிட்டன் அரசாங்கம் ஜெர்மனியை தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனத்துடன் இது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மாடர்னா மற்றும் மெர்க் & கோ மருந்து நிறுவனங்கள் சோதனை புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன. இந்த சோதனை புற்றுநோய் தடுப்பூசி மிகவும் கொடிய தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதால் மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வரும் அல்லது இறப்புக்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

Exit mobile version