Site icon Tamil News

ஆறு வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் – தாய் உள்ளிட்ட நால்வர் கைது

ஆறு வயது  சிறுவனை கொடூரமாக அடிக்கும் காணொளி ஒன்று வெளியாகி பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆறு வயது சிறுவன் தற்போது தனது தாயுடன் மாவனல்லை, அரநாயக்க, எஹலகஸ்தான பகுதியில் வசித்து வருவதாகவும், தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  சிறுவனின் தந்தை தாயை பிரிந்து சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி கற்கும் வயதாகியும் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ள இச்சிறுவனை தாய் உட்பட இரு வயோதிபர்கள் அவ்வப்போது கொடூரமாக தாக்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரவும் பகலும் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால் குழந்தை கடுமையாக தாக்கப்படுவதாக அயலவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக குழந்தையின் மனநிலை முற்றாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த (12ம் திகதி ) மாலை, குழந்தையை கொடூரமாக அவரது பெற்றோர் அடித்து தரையில் இழுத்துச் சென்று வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை சாத்தி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், குழந்தையை தாக்கியதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், குழந்தையின் தாயார் மற்றும் தாக்குதலை ஊக்குவித்ததாக கூறப்படும் அயலவர் பெண் ஒருவரும் அரநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாவனெல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ந

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் தந்தையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் தாக்கியதாக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Exit mobile version