Site icon Tamil News

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

42 வயதான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றுப் பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு அவர் பொது வெளியில் தோன்றுவதனைத் தவிர்த்து வந்தார். இதனால் பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருகிறது. மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Exit mobile version