Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் காதலிக்கு காதலன் செய்த கொடூரம்

ஆஸ்திரேலியாவில் விபத்தில் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்ற நபருக்கு 4 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயது நபர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி அது விபத்துக்குள்ளான பிறகு கடுமையாகக் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்றார்.

அதற்கு அவருக்கு 4 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Epping நகரின் Houblons மலையில் உள்ள ஒரு காரில் 20 வயது ஜெஸ் Jess Waterman என்ற பெண்ணை பொலிஸ் அவதானித்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் உயிரிழந்தார். சம்பவத்தின் தொடர்பில் 33 வயது Nathan Towers என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

Towers கார் ஓட்டும் உரிமம் வைத்திருக்கவில்லை, அவர் ஓட்டிய கார் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் காயமடைந்த தனது காதலியை Towers கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுச்சென்றிருக்கிறார்.

கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் அவர் சம்பவ இடத்தைவிட்டுச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Exit mobile version