Tamil News

கனடாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

நோவாஸ் ஸ்கோட்டியா மழை வெள்ளத்தில் காணாமல் போன நான்கு பேரில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ள நிலைமைகளினால் நான்கு பேர் காணாமல் போயிருந்தனர்.இவ்வாறு காணாமல் போனவர்கள் இரண்டு பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் நீரில் மூழ்கிய போது அதிலிருந்து தப்பிக்க முடியாத சிலர் இவ்வாறு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மீட்பு பணியாளர்கள் பல்வேறு வழிகளில் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

Canadian police find remains after severe flooding in Nova Scotia - The San Diego Union-Tribune

இவ்வாறான ஒரு பின்னணியில் காணாமல் போனதாக கூறப்படும் 52 வயதான நபர் ஒருவரின் சடலம் மீட்பு பணியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த உடல் பாகங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version