Site icon Tamil News

அனுரகுமாரா திஸாநாயக்க ஸ்வீடன் பயணம்!

தேசிய மக்கள் படையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் சென்றுள்ளார்.

நேற்றிரவு (25.04) அவர் இலங்கையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க அங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், அனுர குமார திஸாநாயக்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Exit mobile version