Site icon Tamil News

2வது விருப்பு வாக்கு எண்ணிக்கையின்றி இலங்கையின் ஜனாதிபதியாகும் அனுரகுமார?

2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

“இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்பது மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் இருந்து வரும் அறிக்கையின்படி நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின்றி வெற்றி பெறுவதற்குத் தேவையான 50% அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக் கொண்டாரா என வினவியபோது, ​​“எங்களிடம் உள்ள வாக்கு வித்தியாசத்தில் அவர் 50% ஐ அடைகிறாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இரண்டாவது வேட்பாளரால் அவரை எட்ட முடியாது என்பது தெளிவாகிறது.

உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இறுதி முடிவுகள் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதைப் பொறுத்து அது ஞாயிற்றுக்கிழமை மாலையாக இருக்கலாம்.” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version