பாடசாலையில் 12 வயதான மாணவியை 55 வயதான ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஆசிரியரை நேற்று (06) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஆசிரியரால் ஏனைய மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை அறிய ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.