Site icon Tamil News

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தாயர் நிலையில்!

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 1,204 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரசன்ன கினிகே தெரிவித்தார்.

இதனிடையே, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக சிக்கல்கள் இருந்தாலும், அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் உரிய முறையில் தயார்படுத்தப்பட்டு வருவதாக கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்காக அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்துள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜெகத் சந்திரலால் தெரிவித்தார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் நாளையும் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். எல். ஏ. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு வாக்களிப்பதற்கு அவசியமில்லை என திரு.ரத்நாயக்க தெரிவித்தார்.

Exit mobile version