Site icon Tamil News

ஜோர்தானில் விசா காலம் நிறைவடைந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர்கள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

உரிய நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர் ‘அட தெரண’விடம் தெரிவித்தனர்.

Exit mobile version