Site icon Tamil News

கொழும்பு புறநகரில் பாடசாலை மாணவியை கூட்டு பலாத்காரம் -ஐவரை கைது செய்ய தேடுதல் வேட்டை

ஹங்வெல்ல – அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 05 இளைஞர்களை கண்டுபிடிக்க விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹங்வெல்ல  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது,  யுவதியைமோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று இன்று (21) கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து  யுவதி அளித்த  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version