Site icon Tamil News

அமெரிக்காவின் திடீர் முடிவால் கடும் சிரமத்தில் விமான பயணிகள்

அமெரிக்காவின் பல முக்கிய விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை சேவையில் இருந்து அகற்றியதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவில் இருந்து ஒன்டாரியோ நோக்கி பயணித்த விமானம் ஜன்னல் உடைந்ததால் 16,000 அடி உயரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த காரணத்திற்காக, பல முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.

எவ்வாறாயினும், அந்த விமானங்களின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் சேவைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version