Tamil News

“ஊ சொல்றியா மாமா” மீண்டும் பட்டையை கிளப்ப தயாராகும் சமந்தா..

அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் கொண்டாட்டத்திற்குரிய பல அம்சங்கள் இருந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் அதிகமான கவனத்தை பெற்றன.

குறிப்பாக படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு சிறப்பான ஆட்டம் போட்டிருந்தார். “ஊ சொல்றியா மாமா” என்று அவர் கிறக்குடன் ஆடிய ஆட்டத்திற்கு ரசிகர்கள் அதிகமாக மயங்கிப் போனார்கள். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவையும் இந்தப் பாடல்மூலம் சமந்தா ஓரங்கட்டினார்.

இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஒரு பாட்டிற்கு சமந்தாவை ஆட வைக்க படக்குழுவினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தன்னுடைய சிகிச்சைக்காக ஓய்வில் உள்ள சமந்தா, இந்தப் பாடல்மூலம் மீண்டும் ரீ என்ட்ரியை சிறப்பாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் பாடலுக்கான வேலைகளை தேவிஸ்ரீ பிரசாத் முடித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகத்தில் படத்தின் கொண்டாட்டத்திற்கு அதிகமான விஷயங்கள் இருந்த போதிலும் சமந்தா இந்தப் பாடல்மூலம் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும்வகையில் மீண்டும் சமந்தாவை படத்தில் இணைக்கும் தயாரிப்புத் தரப்பினரின் இந்த முயற்சி கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் பாடல் எப்படி அமையும் என்று தற்போதே ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Exit mobile version