Tamil News

சூர்யாவின் பிறந்த நாளன்று பெரும் சோகம்.. இரு உயிர்களுக்கு என்ன பதில்?

இன்று சூர்யாவின் 48-வது பிறந்தநாள் தினத்தை தடப்புடலாக கொண்டாட நினைத்த இரண்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மோபுரிவாரிபாலன் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் நரசாராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என அவருடைய பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவத்தை இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுக்கு உதவி சென்ற இன்னொருவரும் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பரிதாபமாக உயிரிழந்த அந்த இரண்டு வாலிபர்களும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு 2ம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட ரசிகர்களின் மரணம் தற்போது அவர்களது குடும்பத்தை மட்டுமல்ல ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அறிந்ததும் சூர்யாவும் மிகவும் கலக்கத்தில் இருக்கிறார்.

Exit mobile version