Site icon Tamil News

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில் விவரம் சரியாக சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜுலை மாதம் தொடர்பான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வைப்பிலிட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பயனாளிகள் வங்கிகளில் பணம் பெற முடியும் எனவும் மேலும் தவறான தகவல் அளித்து சலுகை பெற்றவர்கள் இருப்பின், பெறப்பட்ட பணத்தை மீட்டு சட்ட நடவடிக்கை எடுக்க நற்காரிய பலன்கள் வாரியம் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version