Site icon Tamil News

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பிற்காக கப்பல் ஒன்றை வாடகைக்கு வாங்க நடவடிக்கை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்பிற்காக கப்பலொன்றை வாடகைக்குப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறையைப் பின்பற்றி வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக 2022.11.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன்படி  அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2023.06.01 தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் துரித பதிலளிப்புக் கப்பலொன்றை பணியில் அமர்த்துவதற்கான ஒப்பந்தம் எம்.எஸ். இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த யோசனையை  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த நிலையில், அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Exit mobile version