Site icon Tamil News

சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

அலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகளின் அறிவித்தலை அடுத்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் இன்று (27) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக அலபத்த பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பகுதியில் வசிக்கும் 25 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பஸ்ஸில் செல்வதற்காக காலை 06.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி எனவும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக கல்வியை முடித்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவர் இரத்தினபுரி பெர்குசன் பெண்கள் உயர்நிலைப் பாடசாலையின் பழைய மாணவி. குடும்பத்தின் மூத்த மகளும் கூட. மேலும், அவருக்கு ஒரு தம்பியும், ஒரு சகோதரியும் இருப்பதாகவும் கொலிசார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கு முன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இரத்தினபுரி மற்றும் நிவித்திகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version