Site icon Tamil News

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்து – ரணில்!

 

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில்  பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும் எனத் தெரிவித்த அவர், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமை உலகில் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமையை தோற்விக்குமெனத் தெரியாது. எனவே எதிர்காலத்தில் எமது தடைப்படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.

இதனைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு 2023 என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ளதை விட வேறுபட்ட பலம் மிக்க முப்படை உருவாக்கப்படும். அவை நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்றார்.

Exit mobile version