Site icon Tamil News

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான பிரேரணைகளையும் அவர் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரங்கள் இன்றி திருத்தத்தை வலுப்படுத்தும் வகையில் அது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது குறித்தும் இங்கு விளக்கமளிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கும் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த விவாதம் தொடர்ச்சியாக இழுப்பறி நிலையில், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸ் அதிகாரங்கள் இன்றிய 13 ஆவது திருத்தத்தை தமிழ் தரப்புகள் ஏற்க மறுத்து வருகின்றன.

இதற்கிடையே இந்திய அரசும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version