Site icon Tamil News

சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: தேசபந்து தென்னகோன்

உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது சோதனைக்காக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த பின்னணியில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version