Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் திடீரென உயிரிழந்த இளம் தந்தை

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் கீழே விழுந்து திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை இராசத்தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற போது டெங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதனையடுத்து இன்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Exit mobile version