Site icon Tamil News

இலங்கையில் விசா முறையை இலகுப்படுத்த நடவடிக்கை

இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசா முறையை இலகுபடுத்தும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, நாட்டில் செயற்படும் விசா முறையை மீளாய்வு செய்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் செயற்பட்டுள்ளதுடன், தற்போதைய வீசா முறையை இலகுபடுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகையான விசாக்களின் கீழ் வழங்கப்படும் விசா வகைகளின் தற்போதைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. .

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து விசா என மூன்று வகையான விசாக்களை வழங்குகிறது.

Exit mobile version