Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் இளம் வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மந்தகை வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதான இளம் தமிழ் வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர் கடந்த 10ஆம திகதி தனது பணியை முடித்துக் கொண்டு வெளியேறியிருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த நண்பர் ஒருவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, அவரை பலமுறை கூப்பிட்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.

எனவே அவர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, ​​​​ அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார்.

வைத்தியரின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கே.வாசுதேவன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version