Site icon Tamil News

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : 02 வயது குழந்தை பலி!

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது மற்றும் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தையும் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் வெல்லவாய ஆனபல்லம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் என்பதுடன், விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதியை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version