Site icon Tamil News

எம்.கே.சிவாஜிலிங்கம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் கலந்து கொள்வதற்காகவே அவர் கடந்த 29ஆம் திகதி கொழும்பு வந்துள்ளார்.

விசாரணை முடிந்து சென்னைக்கு சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் அங்கு  திடீர் சுகயீனம் அடைந்துள்ளார்.

Exit mobile version