Site icon Tamil News

இலங்கையில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் வெல்லவ பகுதியில் பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.

119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version