போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
அம்பலாங்கொடையில் இன்று (16.12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த வேலையில் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். முதலாளி என்ன பேசினாலும் போதைப்பொருள் வியாபாரிகளை காப்பாற்ற விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.