Site icon Tamil News

பிலியந்தலையில் ஹெரோயினுடன் தாயும் மகனும் கைது!

பிலியந்தலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தனது 23 வயது மகனுடன் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 39 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிசார் தற்செயலாக சோதனையிட்டதுடன், அந்த இளைஞனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனின் தாய் என கூறப்படும் பெண்ணிடம் 14 கிராம் 910 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது மேலும் பல போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

போதைப்பொருள் கடத்தலின் மதிப்பு 01 மில்லியன் ரூபா பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள நீலங்க என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியுடன் இவர்கள் இருவரும் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிலியந்தலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Exit mobile version