Site icon Tamil News

நைனாமடமவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஆழ்கடல் மீன் இனம்

மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழுவினால் நைனாமடம பகுதியை அண்மித்த கடற்பகுதியில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைனாமடம, வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான பல நாள் இழுவை படகு மூலம் இந்த மீன் பிடிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றும், இந்த வகை மீன் உண்ணக்கூடியது அல்ல என்றும் துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.

தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (NARA) கூற்றுப்படி, இந்த மீன் இனமானது முயல் மீன் (Rhinochimaera atlantica – Broadnose Chimaera) என அழைக்கப்படுகிறது, மேலும் இது கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல்,சுரினாம் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு அருகில் காணப்படுகிறது.

மிதமான கடல்களில் 1,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வாழ்கிறது.2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் பின்னர் இந்த வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாரா தெரிவித்துள்ளது.இவ்வகையான ஒரு மீன் 140 சென்டிமீட்டருக்கும் அதிகமாக வளரக்கூடியது.

Exit mobile version