Site icon Tamil News

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

மொனராகலை – ஒக்கம்பிடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் துப்பாக்கியை பராமரிக்கும் செயற்பாட்டில் இன்று, முற்பகல் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கி இயங்கியுள்ளது.

இதன்போது, அருகில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version