Tamil News

சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தர மறுத்த நபரொருவர் குத்திக் கொலை… இரு சிறுவர்கள் கைது!

டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த நபரை, கத்தியால் குத்திக் கொன்ற சிறுவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வடக்கு டெல்லியின் திமர்பூர் காவல் நிலைய பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை அன்று பொதுத் தொலைபேசியில் இருந்து போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு கத்தியால் குத்தப்பட்டு படுகாயமுடன் கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Delhi: Teen stabs youth to death for refusing to give matchbox to light  cigarettes

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்து இரு சிறுவர்களை போலீஸார் பிடித்தனர்.

கொல்லப்பட்ட நபரிடம் ஒரு சிறுவன், சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளான். அப்போது அந்த நபர் திட்டியதால், சிறுவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு சிறுவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நபரை குத்தியுள்ளான். பின்னர், இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version