Site icon Tamil News

ஐரோப்பாவில் போக்குவரத்து சிக்கல்களை கையாள புதிய நடவடிக்கை : 2.3 பில்லியன் செலவில் உருவாகும் புதிய திட்டம்!

2.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நம்பமுடியாத புதிய ரயில் நிலையம்  ஐரோப்பிய நகரத்தில் போக்குவரத்து குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர உள்ளது.

டஸ்கனி முழுவதும் ரயில் பயணத்தை மேம்படுத்தும் புதிய நிலையம் புளோரன்சில் திறக்கப்படவுள்ளது.

புதிய Firenze Belfiore நிலையம் Firenze Santa Maria Novella இல் உள்ள நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் நிலையமானது  வரும்  2028 இல் திறக்கப்படும். அப்போது Florence இன் முக்கிய போக்குவரத்து மையமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழியில், இத்தாலியின் முக்கிய ரயில் பாதைகளில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கான இடங்களை அதிகரிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version