Site icon Tamil News

கார்கிவ் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்: 17 பேர் படுகாயம்

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் ரஷ்யா இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீதான இரவு நேரத் தாக்குதலில், 20 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மருத்துவ மையம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தின் மையத்தில் இரண்டு S-300 ஏவுகணைகள் கட்டிடங்களைத் தாக்கியதாகவும், 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிராந்திய ஆளுநர் Oleh Syniehubov தெரிவித்தார்.

“இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version