Site icon Tamil News

ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்

கிழக்கு ஜெர்மனியில் வெளிநாட்டு அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் நகரமான மக்டபேர்க்வெலியினுடைய வெளிநாட்டு அலுவலகத்தின் மீது நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது இந்த வெளிநாட்டு அலுவலகத்துடைய கண்ணாடி ஜன்னலானது ஒரு நபரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்கேிக்கப்படுகின்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்து இருக்கின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசத்துடைய நகர முதல்வர் தான் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை தான் வண்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த வௌநாட்டு அலுவலகத்தில் கடமையாற்றிய அதிகாரிகள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version