Site icon Tamil News

சடலமாக மீட்கப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தாய்

பன்வில, கல்பிஹில்ல பிரதேசத்தில் வசித்து வந்த 86 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயின் சடலம் இன்று (03) காலை வத்தேகம, ரஸ்ஸெல்ல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புறங்கும்புரேயைச் சேர்ந்த விமலாவதி என்ற 86 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளார்.

பின்னர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரது சடலம் இன்று காலை ரஸ்ஸெல்லவில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கீழே விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த வத்தேகம பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version