Site icon Tamil News

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து !

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனினும் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version