Site icon Tamil News

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியில் புதன்கிழமை இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நேற்று இரவு 10.46 மணியளவில் இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியிலிருந்து தெற்கே 88 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 598.7 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version