Site icon Tamil News

மலேசியாவில் நடந்த சோகம் – வெப்பத்தால் உயிரிழந்த ஒரு வயது குழந்தை

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் வெப்பத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூர் இமானி (Nur Imani) எனும் அந்தக் குழந்தைக்கு ஒரு வயது 7 மாதமாகின்றது.

நூர் இமானி கடந்த ஒருவாரமாக இருமல், வாந்தி முதலிய உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

குழந்தை வெப்பத் தாக்கத்தால் மரணமடைந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

குழந்தையின் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அதனால் அதன் நுரையீரல் சுருங்கிப்போனது.

திங்கட்கிழமை முதல் குழந்தையின் நிலை கவலைக்கிடமானது. அன்றிரவு பெற்றோர் பிள்ளையை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர் மருந்துகள் கொடுத்து அனுப்பிவிட்ட பின் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதற்கு முன் இந்த மாதம் 25ஆம் திகதி, பச்சோக் (Bachok) மாவட்டத்தில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version