Site icon Tamil News

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கிடைக்கவுள்ள பரிசு

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளுக்கும் அவர்கள் பயணம் முடித்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர திட்டமிட்டுள்ளார்.

சிலோன் தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் துறையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், இலங்கை தேயிலை சபை, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்கு இந்த நினைவுப் பரிசை வழங்குவதற்கான யோசனைக்கு தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் இணக்கம் தெரிவித்ததுடன், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அமரவீரவுக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கான செலவை தேயிலை வாரியம் மற்றும் தனியார் துறையினர் ஏற்றுக்கொள்வதால், தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதுடன், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை பார்வையிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளும் இலங்கையில் தேநீர் அருந்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன்காரணமாக எமது நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தேயிலை ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Exit mobile version