Site icon Tamil News

இலங்கையில் தந்தை மற்றும் மகனுக்கு எமனாக மாறிய ஜெனரேட்டர்

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

புபுரஸ்ஸ நெஸ்டா காலனியை சேர்ந்த, 40 வயதுடைய சனத் ரோஹன மற்றும் 17 வயதுடைய ககன மதுசங்க ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு புபுரஸ்ஸ நகரில் வியாழக்கிழமை (23) அன்று உணவு வழங்கும் நிகழ்வு நடாத்துவதற்கு ஆயத்தமாகியிருந்ததால் , அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தனது அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்து குறித்த தந்தையும் , மகனும் உறங்கச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் புபுரஸ்ஸ காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​ ஜெனரேட்டரில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version