Site icon Tamil News

குப்பைத்தொட்டியில் வீசியெறியப்பட்ட குழந்தை! பொலிஸார் விசாரணை

குப்பைத்தொட்டியில் குழந்தையொன்றை வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 16 ஆம் திகதி தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

பின்னர் 20 ஆம் திகதி குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், பொது மக்களின் தகவலுக்கமைய பொலிஸாரால் ;மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள குழந்தை தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல் தொடர்பில் சந்தேகநபரின் தாயாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version