Site icon Tamil News

இலங்கையில் பாடசாலை மாணவர்களுடன் கால்வாயில் மூழ்கிய பேருந்து!

இலங்கை – வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி சிறுவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

வரக்காபொல பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version