Site icon Tamil News

இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாகும் திட்டம்? பதிலளித்த ரணில்

இலங்கையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதில் தனது கவனத்தை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version