Site icon Tamil News

இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம்!

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டவர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (08.08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இடத்தில் கடும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பெண் ஒருவர் உட்பட 08 ஆண்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version