Site icon Tamil News

குளவிக் கொட்டுக்கு பயந்து தப்பியோடிய சிறுவன் பாறையில் விழுந்து உயிரிழப்பு

பம்பரகெலேவத்த, காட்டுப் பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு சிறுவர்கள், தப்பிக்க ஓடும்போது, ​​குன்றின் மீது விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பம்பரகெலேவத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நான்கு சிறுவர்களும் 16 வயதுடையவர்கள் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குன்றின் மீது இருந்து தவறி விழுந்த சிறுவன் பொலிசார், நுவரெலியா மாநகர தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version